உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இருக்கின்றது.

உண்ணும் உணவும் உணவு பழக்கவழக்கங்களுமே உடல் நலத்தை தீர்மானிக்கின்றன .

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 25 மே, 2023

தேங்காய் பால் தரும் நன்மைகள்!!*

                                   

*Coconut Milk Benefits:

தேங்காய் பால் தரும் நன்மைகள்!!*_

தேங்காய் பாலில் உடல் பலத்திற்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் சி, விட்டமின் , பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

தேங்காய் பாலில் இருக்கும் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

எனவே இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள அதனை விரைவில் குறைக்கலாம்.

தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது.

இது மாங்கனீசு குறைபாட்டால் உடலில் வரும் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது.

காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது. உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் மீள் திறனுடன் வைத்திருக்கும்.

உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் தேங்காய் பால் எடுத்துக்கொண்டால், இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற நோய் வராமல் தவிர்க்கும், இதில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படும்போது, உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

உடல் எடையை குறைக்க முயற்ச்சி செய்பவர்கள் தேங்காய் பால் எடுத்துக்கொண்டால் நல்ல பலன் அடையலாம். ஏனெனில் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.

தேங்காய் பாலில் செலினியம் அதிகம் உள்ளது.செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

*நன்மைகள் :*

தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. கர்ப்பிணிகளுக்கு இது நல்லது.

தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது.சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது.

தேங்காய் பாலில் உள்ள லாரிக் அமிலமானது எளிதாக உறிஞ்சப்படுவதுடன், உடலுக்கு தேவையான ஆற்றலினை தருகிறது. ஆண்மையை அதிகரிக்க உதவும்.

தேங்காய் பாலில் உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால் , அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

தேங்காய் பால் உட்கொள்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி மாரடைப்பு வருவதை குறைக்கிறது.

மேலும், உடலில் உள்ள கொழுப்பினை குறைத்து, தசைகளை வலிமைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியமானது உடைந்த செல்களை சரி செய்கிறது.

தேங்காய் பால் உடலின் செரிமான மண்டலம் சீர்செய்து உடல் நலத்தினை மேம்படுத்துகிறது.

தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

மெக்னீஸியம் நிறைந்துள்ள தேங்காய் பால் உடலின் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

சரும எரிச்சல், சொரியாசிஸ், பக்டீரியா தொற்று போன்ற பிரச்னைகளுக்கு தேங்காய்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாகத் தடவ நிவாரணம் கிடைக்கும்.

வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க தேங்காய் பாலை தலையின் அடிமுதல் நுனி வரை தடவி, ஐந்து நிமிடங்களுக்கு தலையில் மசாஜ் கொடுத்து 20 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் பால் ஒரு சிறந்த கண்டிஷனர். இதை பயன்படுத்தும் ஷாம்புவுடன் சரிபாதி அளவு கலந்து குளித்தால் கூந்தலுக்கு நல்லது.

வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

வயதாவதால் ஏற்படும் சரும சுருக்கங்கள், சருமத்தொய்வு போன்றவற்றைத் தவிர்க்க காப்பர் மற்றும் விட்டமின் சி அடங்கியுள்ள தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவுகிறது.

 

வியாழன், 30 மார்ச், 2023

மனித_உடல்:

 #மனித_உடல்:

1: எலும்புகளின் எண்ணிக்கை: 206

2: தசைகளின் எண்ணிக்கை: 639

3: சிறுநீரகங்களின் எண்ணிக்கை: 2

4: பால் பற்களின் எண்ணிக்கை: 20

5: விலா எலும்புகளின் எண்ணிக்கை: 24 (12 ஜோடி)

6: இதய அறை எண்: 4

7: மிகப்பெரிய தமனி: பெருநாடி

8: சாதாரண இரத்த அழுத்தம்: 120/80 Mmhg

9: இரத்தம் Ph: 7.4

10: முதுகெலும்பில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 33

11: கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை: 7

12: நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6

13: முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 14

14: மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 22

15: மார்பில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 25

16: கைகளில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 6

17: மனித கையில் உள்ள தசைகளின் எண்ணிக்கை: 72

18: இதயத்தில் உள்ள பம்புகளின் எண்ணிக்கை: 2

19: மிகப்பெரிய உறுப்பு: தோல்

20: மிகப்பெரிய சுரப்பி: கல்லீரல்

21: மிகப்பெரிய செல்: பெண் கருமுட்டை

22: மிகச்சிறிய செல்: விந்து

23: மிகச்சிறிய எலும்பு: நடுத்தர காது குத்துகிறது

24: முதல் மாற்று உறுப்பு: சிறுநீரகம்

25: சிறுகுடலின் சராசரி நீளம்: 7 மீ

26: பெரிய குடலின் சராசரி நீளம்: 1.5 மீ

27: பிறந்த குழந்தையின் சராசரி எடை: 3 கிலோ

28: ஒரு நிமிடத்தில் துடிப்பு விகிதம்: 72 முறை

29: சாதாரண உடல் வெப்பநிலை: 37 C ° (98.4 f °)

30: சராசரி இரத்த அளவு: 4 முதல் 5 லிட்டர்

31: வாழ்நாள் சிவப்பு ரத்த அணுக்கள்: 120 நாட்கள்

32: வாழ்நாள் வெள்ளை இரத்த அணுக்கள்: 10 முதல் 15 நாட்கள்

33: கர்ப்ப காலம்: 280 நாட்கள் (40 வாரங்கள்)

34: மனித பாதத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 33

35: ஒவ்வொரு மணிக்கட்டில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 8

36: கையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை: 27

37: மிகப்பெரிய நாளமில்லா சுரப்பி: தைராய்டு

38: மிகப்பெரிய நிணநீர் உறுப்பு: மண்ணீரல்

40: மிகப்பெரிய மற்றும் வலிமையான எலும்பு: Femur

41: மிகச்சிறிய தசை: ஸ்டேபிடியஸ் (நடுத்தர காது)

41: குரோமோசோம் எண்: 46 (23 ஜோடி)

42: பிறந்த குழந்தை எலும்புகளின் எண்ணிக்கை: 306

43: இரத்த பாகுத்தன்மை: 4.5 முதல் 5.5

44: உலகளாவிய நன்கொடையாளர் இரத்தக் குழு:

45: உலகளாவிய பெறுநர் இரத்தக் குழு: ஏபி

46: மிகப்பெரிய வெள்ளை இரத்த அணு: மோனோசைட்

47: மிகச்சிறிய வெள்ளை இரத்த அணு: லிம்போசைட்

48: அதிகரித்த சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை: பாலிசித்தீமியா

49: உடலில் உள்ள இரத்த வங்கி: மண்ணீரல்

50: வாழ்க்கை நதி என்று அழைக்கப்படுகிறது: இரத்தம்

51: சாதாரண இரத்தக் கொழுப்பு அளவு: 100 மிகி / டிஎல்

52: இரத்தத்தின் திரவப் பகுதி: பிளாஸ்மா

வாழ்க்கை என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தை அனுபவிக்க உங்களை அனுமதிக்கும் ஒரு முழுமையான வடிவமைக்கப்பட்ட இயந்திரம். அதை கவனித்துக் கொள்ளுங்கள். தீமைகள் மற்றும் அதிகப்படியானவற்றால் அதை சேதப்படுத்தாதீர்கள்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2022

அல்சர்குடல்புண் பிரச்சனைதீர சில எளிய வழிமுறைகள்.

 


                  அல்சர்

என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள் . இந்த புண்கள் உணவை தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால் இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து இரைப்பையின் சுவற்றில் புண்கள் உண்டாகி அதன் மூலம் கடுமையான வயிற்று வலியை சந்திக்க நேரிடும்.

                             குடல் புண் என்னும் அல்சர் அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்தாலும் வரும். இந்த அல்சர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், அதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

  அல்சர் பிரச்சனைக்கான சில எளிய முறைகள்.

   1.தேங்காய்_பால் :

   அல்சர் இருப்பவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர விரைவில் வயிற்றில் உள்ள புண் குணமாகும்.

 2.ஆப்பிள்_ஜூஸ் :

  தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜீஸ் குடித்து வருவதன் மூலம், அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் குறைக்கலாம்.

3. வேப்பிலை :

  கொளுந்து வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததுக்கு அப்புறம் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி வயிற்று பிரச்சனைகளும் நீங்கும்.

4. முட்டைகோஸ்:

  அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் அல்சரை குணமாக்கலாம்.

 5. அகத்திக்கீரை:

  அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர் சீக்கிரம் நீங்கும்.

6. வெங்காயம்:

 அல்சரால் கடுமையான வயிற்று வலியை சந்தித்தால் பச்சை வெங்காயத்தை உப்பில் தொட்டு உட்கொள்ளுங்கள் இதன் மூலம் அல்சரால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

7. பீட்ரூட்_ஜுஸ் :

  பீட்ரூட் கூட அல்சருக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு பீட்ரூட்டை ஜூஸ் செய்து தேன் சேர்த்து கலந்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வர வேண்டும்.

8. பாகற்காய் :

    பாகற்காயை அல்சர் இருப்பவர்கள் தினமும் உணவில் சேர்த்து வர விரைவில் அல்சரில் இருந்து விடுபடலாம். அதிலும் பாகற்காயை துண்டுகளாக்கி நன்கு காய வைத்து பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் பாகற்காய் பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

8. நெல்லிக்காய்:

  வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய் , அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து கலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

9. மணத்தக்காளி_கீரை:

  மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல் சருக்கு மிகவும் நல்லது எனவே அந்த கீரையை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு 3 முறை ட்கொண்டு வர விரைவில் அல்சர் குணமாகும்.

சூடான நீர்  குடிப்பதனால்  இவ்வளவு நன்மையை?

செவ்வாய், 11 அக்டோபர், 2022

சக்கரை நோயாளியின் விரலைவெட்டவேண்டாம்

விரலைவெட்டவேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.

மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு 

மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால் 

காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்

அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை 

இதற்க்கு கண்கண்ட மருந்து .

#ஆவாரம்_இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிா்ந்து பலாின் 

கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.! 

வியாழன், 6 அக்டோபர், 2022

சூடான நீர் குடிப்பதனால் இவ்வளவு நன்மையை?



             ஜப்பானிய மருத்துவர்களின் குழு சில உடல்நலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சூடான நீர் 100% பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது:

  1 ஒற்றைத் தலைவலி

  2 உயர் இரத்த அழுத்தம்

  3 குறைந்த இரத்த அழுத்தம்

  4 மூட்டு வலி

  5 இதயத்துடிப்பில் திடீர் அதிகரிப்பு மற்றும் குறைவு

  6 வலிப்பு நோய்

  7 கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தது

  8 இருமல்

  9 உடல் அசௌகரியம்

  10 வலி கோலு

  11 ஆஸ்துமா

  12 பெர்டுசிஸ்

  13 நரம்புகளை வெண்மையாக்கும்

  14 கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்கள்

  15 வயிற்று பிரச்சனைகள்

  16 மோசமான பசி

  17 மேலும் கண்கள், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்.

  18 தலைவலி


  சூடான நீரைப் பயன்படுத்துவது எப்படி?

  அதிகாலையில் எழுந்து உங்கள் வயிறு காலியாக இருக்கும்போது 4 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்கவும்.  நீங்கள் முதலில் 4 கண்ணாடிகள் குடிக்க முடியாது ஆனால் காலப்போக்கில் நீங்கள் அங்கு வருவீர்கள்.

  குறிப்பு: தண்ணீர் எடுத்த 45 நிமிடங்களுக்குள் எதையும் சாப்பிட வேண்டாம்.

  சூடு நீர் சிகிச்சை உடல்நலப் பிரச்சினைகளை சரியான நேரத்தில் தீர்க்கும்:

  ✔ 30 நாட்களில் நீரிழிவு

  ✔ இரத்த அழுத்தம் 30 நாட்களில்

  ✔ 10 நாட்களில் வயிற்று பிரச்சனை

  ✔ அனைத்து வகையான புற்றுநோய்களும் 9 மாதங்களில்

  ✔ 6 மாதங்களில் * நரம்புகளை வெண்மையாக்கும்

  ✔ 10 நாட்களில் குறைந்த பசி

  ✔ கருப்பை மற்றும் தொடர்புடைய நோய்கள் 10 நாட்களில்

  ✔ நாசி, காது மற்றும் தொண்டை பிரச்சனை 10 நாட்களில்

  ✔ பெண்களின் மாதவிடாய் பிரச்சனை 15 நாட்களில்

  ✔ 30 நாட்களில் இதய நோய்

  ✔ 3 நாட்களில் தலைவலி / மைக்ரேன்

  ✔ 4 மாதங்களில் கொலஸ்ட்ரால்

  ✔ 9 மாதங்களில் தொடர்ந்து கால்-கை வலிப்பு மற்றும் முடக்கம்

  ✔ 4 மாதங்களில் ஆஸ்துமா


  குளிர்ந்த நீர் உங்களுக்கு மோசமானது.

  இளமையில் குளிர்ந்த நீர் உங்களைப் பாதிக்கவில்லை என்றால், வயதான காலத்தில் அது உங்களைத் தாக்கும்.

  * குளிர்ந்த நீர் 4 இதய நரம்புகளை மூடி, மாரடைப்பை ஏற்படுத்துகிறது.  மாரடைப்பு வருவதற்கு குளிர் பானங்கள் முக்கிய காரணம்.

  * கல்லீரலில் பிரச்சனைகளையும் உருவாக்குகிறது.  இது கொழுப்பை கல்லீரலில் ஒட்ட வைக்கிறது.  கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பெரும்பாலானோர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதால் பலியாகின்றனர்.

  * குளிர் நீர் வயிற்றின் உள் சுவர்களை பாதிக்கிறது.  இது பெரிய குடலை பாதித்து புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

  தயவு செய்து இந்த தகவலை உங்களுக்கே வைத்துக்கொள்ளாதீர்கள்.

 அதை மற்றவர்களுக்குக் கடத்தச் சொல்லுங்கள்.

 இது ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்.

 பெறப்பட்டது போல் முன்னனுப்பப்பட்டது.... 

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

  


நூறு டாக்டர்கள் இருக்காங்க கால் கிலோ இஞ்சில.

இஞ்சியை கறிக்கு டீக்கு மட்டுமே யூஸ் பண்றோம்.

ஆனால் பாருங்க இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் என்று!!!!!

நோய்களை  நீக்குவதில்  இஞ்சிசமையலறை மருத்துவர்!

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.