பொன்னாங்கண்ணிக் கீரை பலவித நோய்களை
குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும்
மூலிகையாகவும் திகழ்கிறது.
பொன்னாங்கண்ணிக் கீரையை சமையல் செய்து
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்ணொளி கொடுக்கும்
சத்துக்கள் அதில் உள்ளன. இதை
அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால்,
கண்ணாடி அணிய வேண்டிய தேவையே
இருக்காது. மேலும் உடலுக்கு தேவையான
சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும்
முடியும்.
பொன்னாங்கண்ணிக் கீரை காச நோய்,
இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத
நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த உணவாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையைத் தைலமாகத் தயாரித்தும் பயன்படுத்தலாம். அதாவது கீரையின் சாறு
எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய்
சேர்த்து காய்ச்ச வேண்டும். மெழுகுப்பதம்
வரை கொதிக்க வைத்து வடிகட்ட
வேண்டும். அந்த தைலத்தை தலையில்
தேய்த்து குளித்து வந்தால் கண் புகைச்சல்,
உடல் சூடு ஆகிய பிரச்சினைகள்
சரியாகும். புத்துணர்வும் கிடைக்கும். கண் பார்வையும் தெளிவாகும்.
பொன்னாங்கண்ணி கீரை உடல் எடை
குறைக்க சிறப்பாக உதவுகிறது. தினமும் பொன்னாங்கன்னி கீரை
சமைக்கும் போது அதனுடன் மிளகும்,
உப்பும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை
குறையும்.
பொன்னாங்கன்னி கீரையை நன்றாக கழுவி,
மிக சிறியளவில் நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன
வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள்
போன்றவற்றை சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டு
வருவதால் உடலில் இரத்தம் தூய்மை
அடையும்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக